அமெரிக்காவில் பசுக்களுடன் உறவு வைத்துக் கொண்ட நபர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் ஹெர்கிமெர் கவுன்டி பகுதியை சேர்ந்த விவசாயி ஒருவர், தனது பண்ணையில் பசுக்களை வளர்த்து வந்துள்ளார்.
நாட்கள் செல்ல செல்ல பசுக்கள் பால் தருவது குறைந்தது, மேலும் விவசாயி அருகில் வந்தவுடனேயே பசுக்கள் மிரண்டு போயின. ஏன் இப்படி நடக்கிறது என்பது தெரியாமல் குழம்பிப் போன விவசாயி, பண்ணையில் கண்காணிப்பு கமரா ஒன்றை பொருத்த திட்டமிட்டார்.
மறுநாள் கமராவை ஓட விட்டு பார்த்தபோது தான் பசுக்கள் மிரள்வதற்கான தெளிவான காரணம் அவருக்கு தெரிய வந்தது.
கமராவில் பதிவான காட்சியில் ஒரு மனிதன் அவரது பசுக்களுடன் பாலியல் உறவு வைத்துள்ளான். மற்றொரு மனிதன் அதனை தனது வீடியோ கமெராவில் படம் பிடித்து கொண்டிருந்தான்.
வீடியோ படம் எடுத்தவன் பெயர் மைக்கல் ஜோன்ஸ்(35), மற்றொருவன் பெயர் ரீட் பான்டைன்(31). இதனையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர், விரைவில் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.