நாட்டில் 45ஆவது கொரோனா மரணம் பதிவானது!!

472


கொரோனா..



இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்துள்ளது. கொழும்பு,மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 68 வயதான பெண் ஒருவரே கொரோனாவினால் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயர் குருதியழுத்தத்தினால் மாரடைப்பு ஏற்பட்டு குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.




குறித்த பெண் வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்த பெண்ணின் பிரேதப் பரிசோதனையின் போதே கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தார் என்பது தெரியவந்துள்ளது.