வவுனியா பிரதேச செயலகத்தால் தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு உதவித் திட்டங்கள்!!

779

உதவித் திட்டங்கள்..

கொவிட்19 தாக்கம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள் வவுனியா பிரதேச செயலகத்தால் இன்று(12.11.2020) வழங்கி வைக்கப்படது.

கொரோனா தொற்று சந்தேகத்தில் பிசீஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக நாடாளவிய ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனடிப்படையில் வவுனியா பிரதேச செயலக புரிவுக்குட்டபட்ட பண்டாரிக்குளம், வேப்பங்குளம், ரகுபாக்கம், சாளம்பைக்குளம், பம்பைமடு உள்ளிட்ட பகுதிகளில் 93 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களை இரண்டு கட்டங்களாக வழங்கப்பட்டு வருகின்றது.

முதல் கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான
சீனி, அரிசி, பருப்பு உள்ளிட்ட உலர் உணவுப் பொருட்கள் 93 குடும்பங்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

அடுத்த கட்டமாக மிகுதி 5 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.