இலங்கையில் கொரோனா தாண்டவம் : ஒரு வாரத்தில் மாத்திரம் 24 பேர் பலி!!

454

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் 24 பேர் பலியாகியுள்ளனர். இதன்படி கடந்த 5ஆம் திகதி ஐந்து பேரும், 6ஆம் திகதி ஒருவரும், 7ஆம் திகதி நான்கு பேரும்,

8ஆம் திகதி இரண்டு பேரும், 9ஆம் திகதி இரண்டு பேரும், 10ஆம் திகதி மூன்று பேரும், 11ஆம் திகதி ஐந்து பேரும், இன்று இரண்டு பேரும் என மொத்தம் 24 பேர் பலியாகியுள்ளனர்.

இவர்களில் 16 ஆண்களும், 8 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்களில் 12 பேர் (6 ஆண்கள், 6 பெண்கள்) 60 வயதைக்கடந்தவர்கள். இலங்கையில் கொரோனாவால் இதுவரை மொத்தமாக 48 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இதுவரைக் காலத்தில் இலங்கையில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 723 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5022 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 10 ஆயிரத்து 653 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமாகி வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.