கொழும்பு நகருக்குள் கொரோனா பரவல் கட்டுப்பாட்டை மீறி சென்றுள்ளது : ஜயருவான் பண்டார!!

594

கொரோனா பரவல்..

கொரோனா பரவல் கொழும்பு நகர சபை எல்லைக்குள் ஓரளவுக்கு கட்டுப்பாட்டை மீறி சென்று, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் பேச்சாளர் மருத்துவர் ஜயருவான் பண்டார தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடு இன்றிய கொத்தணிகள் ஏற்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். நாட்டிற்குள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பரிசோதனைகளின் அடிப்படையில் 15 ஆயிரம் கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.

சரியான முறையில் பரிசோதனைகளை நடத்தினால், இந்த எண்ணிக்கை இதனை அதிகமாக இருக்கக்கூடும். இதுவரை உலகில் பரவிய தொற்று நோய்களால் ஒரு வருடம் என்ற குறுகிய காலத்தில் இந்தளவு எண்ணிக்கையில் மக்கள் இறக்கவில்லை எனவும் ஜயருவான் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

-தமிழ்வின்-