இலங்கைக்குள் வருவோர் மற்றும் வெளியேறுவோரின் கவனத்திற்கு!!

2140

இலங்கைக்குள் வருவோர்..

இலங்கைக்கு வரும் மற்றும் இலங்கையில் இருந்து வெளியேறும் சகல சுற்றுலாப் பயணிகளிடமும் இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

இலங்கைக்கோ அல்லது வேறு எந்த நாட்டுக்கோ செல்வதற்கு அனுமதி வழங்குவதற்காக கட்டணங்களை செலுத்துமாறு கோரும் நபர்களிடம் கவனமாக இருக்குமாறு வெளிவிவகார அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

அரச நிறுவனங்களை தவிர இலங்கைக்குள் வருகை தர அல்லது வெளியேற வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக இலங்கை அரசாங்கம் தனி நபர்களுக்கோ, நிறுவனங்களுக்கோ எவ்விதமாக அனுமதிகளையும் வழங்கவில்லை என வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.