வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பினர் வறிய குடும்பங்களுக்கு உதவி!!(படங்கள்)

481

வவுனியா செட்டிகுளம், சண்முகபுரம் எனும் இடத்தில் வசிக்கும் பொன்னுத்துரை சோமாவதி, அவருடைய மகள் அஞ்சலாதேவி பேரப்பிள்ளைகள் சசிந்திரன், சுஜித்குமார் ஆகியோர் மிகவும் வறுமையில் வாழ்ந்துவருகிறார்கள்.

பிள்ளைகளின் தாயார் அஞ்சலாதேவி தனது கணவர் கண்முன்னே கொல்லப்பட்டதன் காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது பிள்ளைகளை அம்மம்மாவின் பாதுகாப்பில் உள்ளனர்.

இப் பிள்ளைகளின் படிப்புச் செலவுகளை உதவும் கரங்கள் அமைப்பு ஏற்றுள்ளது. இதன் முதல் கட்டமாக கடந்த 23.02.2014 அன்று அவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டது.

இவ் உதவிகளை சுஜீவன், லக்ஸ்சன் (பூந்தோட்டம்), பார்த்தீபன் (சேவாலங்கா கணக்காளர்), பால்ராஜ் ராஜ்பிரகாஷ் (வவுனியா வைத்தியசாலை ஊழியர்) ஆகியோர்கள் வழங்கினார்கள்.

இவர்களுக்கு உதவும் கரங்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்வதுடன் மேலும் இவர்களுக்கு வாழ்வாதார உதவி தேவைப்படுவதால் முடிந்தவர்கள் இவர்களுக்கு சிறு கைத்தொழிலை ஏற்படுத்தி கொடுக்குமாறு உதவும் கரங்கள் அமைப்பு உங்களை தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றது.

1 2 3 4 5