இலங்கைக்குள் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!!

560

கொரோனா..

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58ஆக அதிகரித்துள்ளது. இதன்போது கொழும்பு – 13 ஜந்துபிட்டி பகுதியைச் சேர்ந்த 54 வயது ஆண்,

கொழும்பு- 15 பகுதியைச் சேர்ந்த 39 வயது ஆண்,கொழும்பு-12 பகுதியை சேர்ந்த 88 வயது ஆண்,கொழும்பு – 8 பகுதியைச் சேர்ந்த 79 வயது ஆண்,கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 88 வயது ஆண் என மரணங்கள் பதிவாகியுள்ளன.