198 புள்ளிகளை பெற்றுள்ள மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி!!

1239

சிறிசங்கர் பவினயா..

வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவி 198 புள்ளிகளை பெற்றுள்ளார்.

வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவியான சிறிசங்கர் பவினயா என்னும் மாணவியே 198 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.

இதேவேளை வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலையில் உறுதிப்படுத்தப்படாத தகவலின் அடிப்படையில் அப்பாடசாலையில் 74 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சித்தி அடைவு மட்டம் அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.