விமானியாக வருவதே எனது எதிர்கால இலட்சியம் : முல்லைத்தீவில் முதலிடம் பெற்ற அஸ்விகன்!!

1584

முரளிதரன் அஸ்விகன்..

முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிரமணிய வித்தியாசாலையை சேர்ந்த முரளிதரன் அஸ்விகன் என்ற மாணவன் 196 புள்ளிகளைப் பெற்று முல்லைத்தீவு மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றுள்ளார்.

தான் ஒரு விமானியாக வருவதே தன்னுடைய எதிர்கால இலட்சியம் என குறித்த மாணவர் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதல் நிலை பெற்றமையால் மகிழ்ச்சி அடைகின்றேன்.

தன்னுடைய இந்த வெற்றிக்காக உழைத்த பெற்றோர் அதிபர் ஆசிரியர் சக மாணவர்களுக்கு நன்றி. கொரோனா வைரஸ் தாக்கத்தின் மத்தியிலும் இணையவழி வகுப்புக்களை மேற்கொண்டு தம்மை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி.

மேலும் எந்த ஒரு சூழ்நிலையிலும் ஊக்கத்தோடும் விடாமுயற்சியோடும் கல்வி கற்றால் எந்தவித சவால்களையும் வெல்ல முடியும் எனவும் கூறியுள்ளார். இதேவேளை குறித்த பாடசாலையில் 46 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக பாடசாலை அதிபர் ந.அமிர்தநாதன் தெரிவித்துள்ளார்.