வவுனியா இளைஞன் யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

362

male hangவவுனியாவைச் சேர்ந்த கணேஸ் ருக்‌ஷன் (26) என்பவரது சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணத்திற்கான ரயில் பாதை அமைப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது சக பணியாளர்கள் 9 பேருடன் உயிரிழந்த நபரும் குறித்த வீட்டில் வசித்து வந்திருந்ததாகவும் நேற்றிரவு மது போதையில் அனைவரும் மது போதையில் இருந்ததாகவும் இதனால் எழுந்த மோதலே கொலையில் முடிந்ததாக கூறப்படுகின்றது.

மேலும் இது கொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை நேற்று பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டு இங்கிருந்த பொருட்கள் தீக்கிரையாக்கியுள்ளன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றன.