அரசாங்க ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் : பிரதமர் மஹிந்த அறிவிப்பு!!

11782

அரசாங்க ஊழியர்களுக்கு..

நிர்வாகமற்ற பிரிவுகளில் பணியாற்றும் அரச ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பணி நேரத்திற்கு பின்னர் வேறு தொழில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இந்த விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்காக வங்கிகள் மூலம் வழங்கப்படும் வீட்டுக் கடன் மற்றும் முற்பண நிதியின் கீழ் வழங்கப்படும் வீட்டு சொத்து கடனிற்கு 7 வீத வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.