இலங்கையில் மேலும் ஐவர் கொரோனா தொற்றுக்கு பலி!!

785

கொரோனா..

இலங்கையில் கொவிட்-19 நோய்த் தொற்றினால் பதிவான மரணங்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 10 பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொவிட்-19 நோய்த் தொற்று தொடர்பில் வெலிகந்தை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ளார்.

உயர் குருதியழுத்தம் மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரத்மலானையைச் சேர்ந்த 69 வயதான பெண் ஒருவர், வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதான பெண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு, இரத்த அழுத்தம் மற்றும் கொவிட் காரணமாக உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 2 பிரதேசத்தைச் சேர்ந்த 81 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். கொவிட்டினால் ஏற்பட்ட நியூமோனியா காரணமாக இந்தப் பெண் உயிரிழந்துள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தெமட்டகொட பிரதேசத்தைச் சேர்ந்த 82 வயதான ஆண் ஒருவர் வீட்டிலேயே உயிரிழந்துள்ளார். நீரிழிவு மற்றும் கொவிட் ஆகியனவற்றினால் இவர் உயிரிழந்தார் என அறிவிக்கப்பட்டுள்ளது.