இலங்கையின் ஒரு பகுதியில் இன்று மீண்டும் நிலநடுக்கம்!!

1151


நிலநடுக்கம்..



கண்டி – திகன பகுதியில் சிறியளவிலான நில அதிர்வு பதிவாகியுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகம் அறிவித்துள்ளது. இன்று முற்பகல் 9.28 அளவில் இந்த நில அதிர்வு பல்லேகல மத்திய நிலையத்திலும் பதிவாகியுள்ளதாக பணியகத்தின் தலைவர் அநுர வல்பொல தெரிவித்துள்ளார்.



இது தொடர்பில் தொடர்ந்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்கத்தொழில் பணியகத்தின் தலைவர் தெரிவித்தார்.




இதேவேளை இந்தப் பகுதில் பல தடவைகள் நிலஅதிர்வுகள் ஏற்பட்டிருந்தன. இதனையடுத்து பாரிய அளவில் நில அதிர்வுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.