பல பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம்!!

749

இடியுடன் கூடிய மழை..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று காலை வேளையில் மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவதாக வானிலை மையம் எதிர்வுகூறியுள்ளது.

பிற்பகல் அல்லது இரவில் வேறு பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு, சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழைக்காலங்களில் வலுவான காற்று மற்றும் மின்னல் ஆகியவற்றால் பாதிப்புக்கள் ஏற்படும் சாத்தியம் காணப்படுகிறது. எனவே இவ்வாறான பாதிப்புகளை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களை கோருவதாக வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.