வலியை போக்க 42 முத்துக்களை உடலில் பதித்த நபர்!!

311

Muthuசீனாவை சேர்ந்த நபர் ஒருவர் கால் வலியிலிருந்து விடுபட அவரது உடலில் பதித்து வைத்திருந்த 42 முத்துக்கள் தற்போது வெளியேற்றப்பட்டுள்ளது.

சீனாவின் ஹுனான் மாகாணத்தை சேர்ந்த 61 வயது நபர் ஒருவர் கடும் முதுகு மற்றும் கால் வலியால் அவதிப்பட்டு வந்தார்.

எலும்புகளில் ஏற்பட்ட பிரச்சனையால் அன்றாடம் வலியில் துடித்த அவரிடம் நண்பர் ஒருவர் முத்துக்களை தோலின் அடியில் பதித்து வைத்தால் இந்த வலியில் இருந்து விடுபடலாம் என தெரிவித்துள்ளார்.

இம்முறையை பயன்படுத்தி பாதிக்கப்பட்ட நபரின் உறவினர் ஒருவர் நலமாடைந்ததால் அவரும் இந்த முறையை பயன்படுத்த முடிவுசெய்தார்.

பாதிக்கப்பட்ட நபரை பரிசோதித்த மருத்துவரும் உடலில் தோலுக்கு அடியில் முத்துக்களை பதித்து வைத்தால் வலியில் இருந்து நிவாரணம் பெறலாம் என தெரிவித்தார்.

அதன்படி வலி ஏற்பட்ட இடுப்பு மற்றும் காலில் முத்துக்களை பதித்து வைத்தார்.

2011 ஆம் ஆண்டு முதல் உடலில் முத்துக்களுடன் வாழ்ந்த இந்த நபருக்கு அண்மையில் மீண்டும் வலி ஏற்பட்டது. இம்முறை அவரால் நடக்கமுடியாமலே போனது.

உடனடியாக நியான்லன் மருத்துவமனைக்கு அழைத்துசெல்லப்பட்ட அந்நபரின் உடலில் இருந்து 42 முத்துக்களையும் நீக்கி மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர்.