வவுனியாவில் பாடசாலைகள் ஆரம்பமாவதையடுத்து தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு!!

977

தொற்று நீக்கும் செயற்பாடு..

பாடசாலைகளில் மூன்றாம் தவணை ஆரம்பமாகவுள்ள நிலையில் பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடு இன்று(22.11.2020) முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் – 19 அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் சுகாதார நடைமுறைகளுடன் தரம் 6 தொடக்கம் 13 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் நாளையதினம் நாடாளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு நகரசபையின் முகாமைத்துவ உதவியாளர் து.சபேசன் மேற்பார்வையின் கீழ் வவுனியா நகரசபையினால் நகரசபை எல்லைக்குட்பட்ட பாடசாலைகளில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

கிருமி நீக்கும் மருந்துகள் விசிறப்பட்டதுடன், கைகழுவுதல் உள்ளிட்ட உள்ளிட்ட சுகாதார நடைமுறைகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.