க.பொ.த சாதாரண தர பரீட்சை திட்டமிட்ட திகதியில் நடைபெறாது : கல்வி அமைச்சர்!!

814

சாதாரண தர பரீட்சை..

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை இன்றைய தினம் கல்வி அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பரீட்சைக்கான புதிய திகதி 6 வாரங்களுக்கு முன்னர் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடத்த ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டது.

குறித்த தினத்தில் பரீட்சையை நடத்துவதா அல்லது இன்னும் பிற்போடுவதா என்பது குறித்த இறுதி தீர்மானத்தை 2 நாட்களுக்குள் எடுக்க எதிர்பார்ப்பதாக நேற்றைய தினம் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது. இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே கல்வி அமைச்சர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.