இலங்கையை நெருங்கும் சூறாவளி : வடக்கு – கிழக்கு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை!!

2119

சூறாவளி..

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புரெவி சூறாவளி காற்று நாட்டை நெருங்கிக் கொண்டு வருவதனால்,

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் திறந்த வெளியிடங்களில் ஒன்று கூடவோ அல்லது வெளியே செல்லவோ வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.