சுற்றுலாவில் பிறந்த திடீர் குழந்தை : ஆச்சரியத்தில் பெற்றோர்!!

474

Babyபிரான்சில் பெண் ஒருவர் தன்னை அறியாமலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்சில் கரைன்(45) என்ற பெண் தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களோடு விடுமுறை தினத்தை கொண்டாடுவதற்கு அல்ப்ஸ் மலைப்பகுதிக்கு சென்ற அவர் அங்குள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

அப்போது திடீரென கடும் வயிற்று வலியால் துடித்துடித்து போன கரைனின் நிலையை கண்ட அவரது கணவர் தன் அறைக்கு அருகே தனது அண்ணியை அழைத்துள்ளார்.

இதனையடுத்து கரைனின் அறைக்கு வந்த அவரது அண்ணி செவிலியராக மாறி 15 நிமிட போராட்டத்திற்கு பின்பு அழகிய பெண் குழந்தை பெற்றெடுக்க உதவி புரிந்துள்ளார்.

இதுகுறித்து கரைனின் கணவர் கூறுகையில், தங்களுக்கு ஏற்கனவே இரு குழந்தைகள் உள்ளது என்றும் இப்பெண் குழந்தை 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது பிறந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தங்களுக்கு இக்குழந்தை பிறப்பதற்கான அறிகுறிகள் ஏதும் அறியப்படமால் இப்படி திடீரென பிறந்தது ஆச்சரியமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் பிரான்ஸ் நாட்டில் இதைபோன்ற சம்பவங்கள் அரிதானவை இல்லை ஏனெனில் சராசரியாக 7,225 கர்ப்பிணி பெண்களுக்கு தாங்கள் கர்பமடைவது தெரியவது இல்லை என ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.