பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட உமா மகேஸ்வரிக்கு மௌன அஞ்சலி!!

265

Uma

சென்னை அடுத்த சிறுசேரி சிப்காட்டில் பொறியியலாளர் உமா மகேஸ்வரி கடந்த வாரம் கொலை செய்யப்பட்டார்.

இந்நிலையில் உமாமகேஸ்வரி இறந்து கிடந்த பகுதியில் உள்ள பற்றைகள் அகற்றப்பட்டன. இந்த பற்றைகள் அகற்றப்பட்ட பின், இந்த பகுதியில் மரங்கள் நட்டு பூங்கா போல் பராமரிக்க வேண்டும் என சிப்காட் வளாகத்தில் உள்ள நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதனிடையே இறந்த உமா மகேஸ்வரிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மென்பொருள் பொறியியலாளர்கள் 1000ற்கு மேற்பட்டோர் திரண்டு, உமா மகேஸ்வரி வேலை பார்த்த நிறுவன வாயிலில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி சிப்காட் நுழைவாயில் வரை நேற்று மாலை 6 மணியளவில் ஊர்வலமாக சென்றனர்.

இறுதியில் உமா மகேஸ்வரி படத்தின் முன்பு நின்று 2 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.