வவுனியா சிவில் பாதுகாப்பு குழுவினருடன் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர சந்திப்பு!!(படங்கள்)

332

வவுனியா மாவட்டத்தில் இயங்கி வரும் சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகளுடன் வட மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர நேற்று (01) கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டார்.

வவுனியா மாவட்டத்தின் 70 சிவில் பாதுகாப்பு குழுக்களின் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டனர்.

குற்றச்செயல்களை கட்டுப்படுத்தல், ஊழலை இல்லாதொழிப்பது தொடர்பாக முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த இக் கலந்துரையாடலில் சிவில் பாதுகாப்பு குழுக்களிடமிருந்து சமூக பிரச்சினைகள் தொடர்பில் எழுத்து மூலமாக கருத்துக்கள் கோரப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வில் வவுனியா அரசாங்க அதிபர் பந்துல கரிச்சந்திர, வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, கிராமசேவகர்கள், சிவில் பாதுகாப்பு குழு பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

1 2 3