வவுனியா பாடசாலைகளில் பணம் கோரினால் முறையிடலாம்!!

526

Transவவுனியா மாவட்டத்தில் பாடசாலை அனுமதிகளின் போது பணம் கோரப்படும் நடவடிக்கைகள் இடம்பெறும் பட்சத்தில் சட்ட உதவி ஆலோசனைகளை பெறமுடியும் என ரான்ஸ்பேரன்சி இன்டநசனல் நிறுவனத்தின் வவுனியா பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது, பாடசாலைகளில் மாணவர்களை புதிதாக இணைக்கும்போது பணம் கோரப்படுவதாக பல முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப்பெற்றுவருகின்றது. இந் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் பட்சத்தில் பலரும் இதனை எவ்வாறு கையாள்வது என தெரியாத நிலையில் முறைப்பாடுகளை செய்யாது விடும் நிலை உள்ளது.

இதன் காரணமாக இவ்வாறு பாடசாலை மட்டத்தில் அனுமதிகளின்போது பணம் கோரப்படும் பட்சத்தில் அதற்கான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட உதவி ஆலோசனைகளை ரான்ஸ்பேரன்சி இன்டநசனல் மூலமாக பெற முடியும். இந்த வகையில் வைரவர் கோவில் வீதி, இரண்டாம் குறுக்கு தெரு, வவுனியா எனும் முகவரியுடன் தொடர்பு கொள்ளமுடியும் என தெரிவித்தார்.