பதுரலிய – கலவான வீதியில் மொரபிட்டிய சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (23) இரவு 9 மணியளவில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.
பதுரலியவிலிருந்து அத்வெல்கொட நோக்கி பயணித்த பஸ் வண்டி மொரபிட்டிய சந்திக்கு அருகில் வீதியை விட்டு விலகி தானசாலை ஒன்றுடன் மோதுண்டதில் இவ் விபத்து இடம்பெற்றதுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர் கஹவத்த பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதான பெண் என பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த 9 பேர் பதுரலிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை மேலும் நால்வர் நாவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பில் பஸ் சாரதி பதுரலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.