யாழில் நண்பர்களுடன் கொழும்பு சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளார்..!

630

கொழும்புக்கு நண்பர்களுடன் சென்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளதாக அச்சிறுவனின் தாயார் அச்சுவெலிப் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளதாக அச்சுவெலிப் பொலிஸார் இன்று திங்கள் கிழமை தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம் புத்தூர் கிழக்கு பகுதியைச் சேந்த கவிதாசன் ரிசாந்தன் 15 வயதுச் சிறுவன் ஒருவனைக் காணவில்லை என அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் அந்தச் சிறுவனின் தாய் முறைப்பாடு செய்துள்ளார்.

இவரது நண்பர்கள் வீடு திரும்பியுள்ள நிலையில் தனது மகன் இதுவரை வீடு திரும்பவில்லை எனவும் அவருக்கு என்ன நடந்தது எனத் தெரியாதுள்ளதாக தாயார் பொலிஸாருக்கு தெரிவித்துள்ளார்.

தனது மகன் கடந்த 19ஆம் திகதி நண்பர்களுடன் கொழும்பு செல்வதாகக் கூறிச் சென்றவர் இதுவரையில் வீடு திரும்பவில்லை என அந்தச் சிறுவனின் தாய் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

இச் சிறுவனைத் தேடிக் கண்டு பிடிக்கும் நடவடிக்கையில் யாழ்.தலமைப் பொலிஸ் பொறுப்பதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது