வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட தாயும் மகளும் : காரணம் வெளியானது!!

14754

லண்டன்..

லண்டன் வீட்டில் ச டலமாக க ண்டெடுக்க ப்பட்ட தாய், மகள் இருவர் கைகளிலும், குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊ சி இருந்ததாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார்.

மேற்கு லண்டனிலுள்ள Hounslowவில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில், Shiwangi Bagoan (25) என்ற இளம்பெண்ணும் அவரது மகளான Ziana Bagoan (2) என்ற குழந்தையும், உ யிரிழந்த நிலையில், குழந்தையின் பாட்டியான Jassumati Laluவால் இம்மாதம் 14ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்கள்.

தன் மகளை கண்ணும் கருத்துமாக காத்துக்கொள்ளும் தாய், மகளுக்காக வாழ்வையே அர்ப்பணித்த தாய், நல்ல மருத்துவமனை பணியாளர் என்றெல்லாம் பாராட்டப்படும் Shiwangi, எதற்காக தன் மகளை கொ.லை செ ய்யும் அளவுக்கு துணிந்தார் என்பது இன்னமும் ம ர்மமாகவே நீடிக்கிறது.

Shiwangi எந்த நாட்டைச் சேர்ந்தவர் என்ற விடயமோ, குழந்தையின் தந்தை யார், அவர் எங்கிருக்கிறார் என்கிற விடயமோ இதுவரை வெளியாகவில்லை.

இந்நிலையில், Shiwangi மற்றும் அவரது மகளை உ யிரிழந்த நிலையில் கண்டுபிடித்த கு ழந்தையின் பாட்டியான Jassumati, அவர்கள் இருவரது கைகளிலும் குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊசி கு த்தப்பட்டிருந்த வண்ணமாகவே அவர்கள் இ.ற.ந்.து கி.ட.ந்.த.தா.க தெரிவித்துள்ளார்.

தான் பணிபுரியும் மருத்துவமனையிலிருந்து ஏதோ ஒரு மருந்தை எடுத்துவந்த Shiwangi, அதை தன் மகளுக்கும் தனக்கும் ஊசி மூலம் ஏற்றிகொண்டதால் இருவரும் உ யிரிழந்திருக்கலாம் என அதிகாரிகள் கருதுகிறார்கள்.

என்றாலும் இன்னமும் முழுமையான உடற்கூறு ஆய்வுகள் வராததால், Shiwangi மற்றும் Zianaவின் மரணம் குறித்த முழு விவரமும் தெரியவரவில்லை. பொலிசார் இந்த ம ரணங்கள் தொடர்பாக யாரையும் சந்தேகிக்கவில்லை என்று கூறியிருக்கிறார்கள்.