கொழும்பில் அடைமழையால் நீரில் மூழ்கிய கீழ்த்தளம் : ஒருவர் உயிரிழப்பு!!

659

கொழும்பில்..

கொழும்பில் நேற்று பெய்த அடைமழை காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு – கொள்ளுபிட்டியில் கட்டடம் ஒன்றின் கீழ்தளம் நீரில் மூழ்கியதில் அவர் உயிரிழந்துள்ளார்.

அடைமழை காரணமாக கொள்ளுப்பிட்டி – டுப்ளிகேஷன் வீதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடம் ஒன்றின் கீழ்தளமே இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.