அதிஷ்டமாக கிடைத்த பொருளுடன் சிக்கிய பெண் : அதன் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபா!!

1507

அம்பர்..

அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி தொகை ஒன்று பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் திமிங்கிலத்தின் 18 கிலோ கிராம் எடையுள்ள அம்பர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வைத்தே அதனை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட அம்பரின் பெறுமதி 160 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது.

அதனை விற்பனை செய்வதற்கு தயாராகிய பெண் ஒருவர் உட்பட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.