திருகோணமலையில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன்!!

1377

திருகோணமலையில்..

திருகோணமலை- இலிங்க நகர் பகுதியில் திடீரென இளைஞர் ஒருவர் மயங்கி விழுந்த சம்பவமொன்று இன்று (30.12.2020) இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர் பெற்றோல் நிரப்பும் நிலையத்தில் பெற்றோல் அடித்துவிட்டு சிறு தூரம் சென்று மயங்கி விழுந்த நிலையில் பொலிசாரின் உதவியுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இவ்வாறு மயங்கி விழுந்தவர் திருகோணமலை இக்பால் நகர் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் எனவும் தெரியவருகின்றது. இவர் மயங்கி விழுந்த நிலையில் அருகில் சென்று உதவி செய்வதற்கு அங்கிருந்தவர்கள் பயந்த நிலையில் இருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

இவருக்கு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் விசாரணைகளை நிலாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.