வவுனியா பட்டானிச்சூரில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

2639


கொரோனா..



வவுனியா பட்டானிச்சூரில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பட்டானிச்சூரில் நேற்று (04.01.2021) இரு கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் அப்பகுதி முடக்கப்பட்டுள்ளது.



பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வழமையான சிகிச்சைக்காக கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில்,




அவருடைய குருதியைப் பெற்று அன்டிஜன் மருந்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று அதிகாலை (04.01) வெளியாகிய நிலையில் குறித்த கர்ப்பிணிப் பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


குறித்த கர்ப்பிணிப் பெண்ணின் உறவினரான கிளிநொச்சி பொறியல் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவருக்கு நேற்று முன்தினம் (03.01) மாலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து குறித்த பெண்ணுடனும் மாணவனுடனும் தொடர்புடையவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


மேற்கொள்ளப்பட்ட பி சி ஆர் பரிசோதனையிலேயே ஒரே குடும்பத்தினை சேர்ந்த மேலும் 5 பேர் இன்று கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.