வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் மீள ஆரம்பம்!!

1832

வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செய்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் இ.நவரட்ணம் தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்டத்தில் உள்ள காணி பிணக்குகள் தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முகமாக விசேட காணி மத்தியஸ்சபை செயற்பட்டு வந்தது.

நாட்டில் ஏற்பட்ட கொவிட் -19 காரணமாக விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை முதல் வவுனியா மாவட்ட விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் சுகாதார வழிமுறைக்களைப் பின்பற்றி நடைபெறும்.

குறித்த மத்தியஸ்தர் சபைக்கு சமூகமளிக்கும் முறைப்பாட்டாளர்கள் மற்றும் பிணக்காளர்கள் ஆகியோரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

அந்த வகையில் வவுனியா விசேட காணி மத்தியஸ்தர் சபையின் அமர்வுகள் எதிர்வரும் 9 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9 மணிமுதல் 1 மணிவரை செட்டிகுளம் பிரதேச செயலகத்திலும்,

10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 1 மணி வரை வவுனியா, குடியிருப்பு இலங்கை திருச்சபை தமிழ் கலவன் பாடசாலையிலும் (சீசீரிஎம்எஜ்),

17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புளியங்குளம் இராமனூர் தனிநாயகம் வித்தியாலயத்திலும் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வழமை போல் விசேட காணி மத்தியஸ்தர் சபையின் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.