திருமணமான 33 வயது பெண் செய்த மோசடி : அதிர்ச்சிப் பின்னணி!!

1251

தமிழகத்தில்..

தமிழகத்தில் அதிக வட்டி தருவதாகக்கூறி லட்சக்கணக்கில் பண மோ சடி செய்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தின் பள்ளேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவி சத்யா (33).

இவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம், தன்னிடம் பணம் தந்தால் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார்.

பார்ப்பதற்கு அழகாகவும் பணக்கார தோற்றத்திலும் சத்யா இருந்த நிலையில் இதனை நம்பி பல பெண்கள் தங்களிடம் இருந்த பணத்தையும், நகைகளையும் கொடுத்துள்ளனர்.

இவ்வாறு பல பெண்களிடம் நகை, பணத்தை பெற்ற சத்யா சில நாட்கள் வட்டியை சரியாக கொடுத்து விட்டு பின்னர் சரிவர வட்டி தரவில்லை என கூறப்படுகிறது.

இதனால் அவரிடம் பணம் கொடுத்த பெண்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் அவரிடம் பணத்தை திருப்பி கேட்ட போது சரியாக பதில் சொல்லாமல் சாக்குப்போக்கு சொல்லி, பணம் கொடுத்தவர்களை மி ரட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் பொலிசில் புகார் செய்தனர். பொலிசார் வழக்குப்பதிவு செய்து சத்யாவை கைது செய்தனர். விசாரணையில் அவர் ரூ.60 லட்சம் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது.

இந்நிலையில் சத்யாவை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.