வவுனியாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

4339

கொரோனா தொற்று..

வவுனியாவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 69 கொரோனா தொற்றாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.

வவுனியா, பட்டானிச்சூர் பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதையடுத்து அவர்களுடன் தொடர்புடையவர்களிடம் கடந்த வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் ஒரு தொகுதியினரின் முடிவுகள் இன்று மாலை வெளியாகிய நிலையில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேற்கொள்ளப்பட்ட பிசீஆர் பரிசோதனையில் வவுனியானின் ஈச்சங்குளம் உள்ளிட்ட பகுதியைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் 7 பேருக்கு கோரோனா தொற்று பீடித்திருந்தமை கடந்த வாரம் உறுதிசெய்யப்பட்டது. இந் நிலையில் பட்டானிச்சூர் கிராமம் கடந்த ஒருவாரமாக முடக்கப்பட்டிருந்ததுடன் குறித்த நபர்களுடன் தொடர்புகளை பேணிய பலருக்கு பிசீஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை வவுனியா பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 146 பேரில் நேற்றுமுன்தினம் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் 100 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் அவர்களில் 40 பேரின் முடிவுகள் மீளவும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது அவர்களில் பட்டாணிசூர் பகுதியை சேர்ந்த 6 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில் ஒருவரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்பபட்டுள்ளது.

இதேவேளை வவுனியா நகர வியாபார நிலையங்களில் நேற்று முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 106 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்படாத நிலையில் 36 பேரது மாதிரிகள் மீளவும் பரிசோதனைக்கு அனுப்ப்படவுள்ளது.

இதேவேளை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மொத்தமாக 8 பேருக்கு இன்றையதினம் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த ஒருவாரத்தில் வவுனியாவின் கொரோனா தொற்றாளர்கள் எண்ணிக்கை 69ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.