வவுனியாவில் இரண்டு நாட்களாக தொடரும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

2334


தொடரும் மழை..



வவுனியாவில் இன்று (11.01.2021) காலை 5.30 மணி தொடக்கம் தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளதுடன் பல மக்களின் வீடுகளிலும் வெள்ள நீர் உட்புகுந்துள்ளது.



சுமார் 8 மணித்தியாலங்கள் நீடித்த மழையினால் வவுனியா – மன்னார் வீதி, நூலக வீதி, வைரவப்புளியங்குளம், பூந்தோட்டம் உட்பட பல பகுதிகளில் வெள்ள நீர் வீதிகளில் தேங்கி நிற்பதுடன் தாழ்நில பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன. வடிகான்கள் சீர் செய்யப்படாமையாலேயே மழை நீர் வீதியில் தேங்கி நிற்பதனை அவதானிக்க கூடியதாகவுள்ளது.




அத்துடன் பூந்தோட்டம் ஸ்ரீநகர், உக்கிளாங்குளம், நெளுக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள 20க்கு மேற்பட்டவர்களின் வீடுகளின் வெள்ள நீர் உட்புகுந்துள்ளமையினால் அவர்களின் இயல்பு நிலையும் பாதிப்படைந்து நிர்கதிக்குள்ளாகியுள்ளனர்.