வவுனியாவில் சற்றுமுன் மேலும் 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்!!

4536

கொரோனா..

வவுனியாவில் இன்று (11.01.2021) இரவு 10.00 மணியளவில் வெளியான பி.சி.ஆர் முடிவுகளின் பிரகாரம் மேலும் 24 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பட்டாணிச்சூர் பகுதியில் ஒரே குடும்பத்தினை சேர்ந்த 7 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதினையடுத்து பட்டாணிச்சூர் உட்பட சில கிராமங்கள் முடக்கப்பட்டதுடன் குறித்த தொற்றாளர்களுடன் தொடர்புடைய நகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் , ஊழியர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பகுதி பகுதியாக முடிவுகள் வெளியாகிய நிலையில் வவுனியா நகரில் 54 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இதனையடுத்து பசார் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை வீதி, ஹொறவப்பொத்தானை வீதி என்பன பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அப்பகுதி வர்த்தக நிலைய ஊழியர்கள், உரிமையாளர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அதன் ஓர் முடிவு இன்று (11.01.2021) 8.00 மணியளவில் வெளியானதில் 25 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமையுடன் வவுனியா வைத்தியசாலையிலும் 2 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

அத்துடன் இரவு 10.00 மணியளவில் வெளியான முடிவுகளில் 24 கொரோனா தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். இதன் பிரகாரம் வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரத்தினுள் பட்டானிச்சூர் பகுதியில் 13 நபர்களும்,

நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 103 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 7 நபர்களும் புளியங்குளத்தில் ஒருவர் என 124 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.