வவுனியாவில் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி : தொற்றாளர்கள் 156 ஆக அதிகரிப்பு!!

3480

கொரோனா..

வவுனியா பழைய பேரூந்து நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் 4 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (14.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 03 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து இன்று இரவு வெளியான முடிவுகளின் அடிப்படையில் பழைய பேரூந்து நிலையப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் மேலும் நால்வருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 156 ஆக அதிகரித்துள்ளது.