வவுனியாவில் மேலும் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

3992

கொரோனா..

வவுனியாவில் நகரில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 16 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (15.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணிபுரியும் 13 பேருக்கும்  ஆடைத்தொழிற்சாலையை சேரந்த 3 பேருக்கும் தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த இரு வாரத்தில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 173 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை வவுனியா நகரப்பகுதிகளை சேர்ந்த மேலும் 500 பேரின் பிசிஆர் முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் நகரின் முடக்கம் தளரத்தப்படும் என பிராந்திய சுகாதாரசேவைகள் பிரதி பணிப்பாளர் மகேந்திரன் தெரிவித்தார்.