வவுனியா நகரில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி : தொற்றாளர்கள் 174 ஆக அதிகரிப்பு!!

2846

கொரோனா..

வவுனியா நகரில் முன்னெடுக்கப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.

வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒரு பகுதி முடிவுகள் இன்று (16.01) காலை வெளியாகிய நிலையில் வவுனியா நகர வியாபார நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் குருமன்காடு பகுதி வியாபார நிலையத்தில் பணிபுரியும் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த 10 நாட்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 174 ஆக அதிகரித்துள்ளது.