தனிமைப்படுத்தல் பகுதிகளாக..
வவுனியா மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்ட 7 பகுதிகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தல் நீடிக்கும் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
மாவட்டத்தில் முடக்கப்பட்ட சில பகுதிகள் 18ம் திகதி திங்கட்கிழமை காலை தொடக்கம் வழமை நிலைக்கு திரும்புவதுடன் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படவுள்ளன.
இந்நிலையில் ஹொரவப்பொத்தானை வீதி, மில் வீதி, சூசைப்பிள்ளையார் குள வீதி, பஜார் வீதி, கந்தசுவாமி கோவில் வீதி, தர்மலிங்கம் வீதி, சந்தை சுற்றுவட்ட வீதி என்பன தொடந்தும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக நீடிக்கும் என சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.