வவுனியாவில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று : தொற்றாளர் எண்ணிக்கை 202 ஆகியது!!

4031

கொரோனா..

வவுனியாவில் 25 பேருக்கு இன்றையதினம் (17.01.2021) கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில்,

வவுனியா நகர வியாபார நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்களிற்கும், அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் ஒருபகுதி முடிவுகள் இன்று (17.01.2021) காலை வெளியாகியது. அதனடிப்படையில் வவுனியா வடக்கில் ஒரு பாடசாலை மாணவி உட்பட, வவுனியா மற்றும், கந்தசாமி கோவில் வீதி,

பண்டாரிகுளம், மகாறம்பைக்குளம், பட்டகாடு, வெளிக்குளம், பட்டாணிச்சூர், கூமாங்குளம் பகுதிகளை சேர்ந்த சேர்ந்த 25 பேருக்கு தொற்று இருக்கின்றமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த எண்ணிக்கையுடன் வவுனியாவில் கடந்த இரு வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்எ ண்ணிக்கை 202 ஆக அதிகரித்துள்ளது.