வவுனியாவில் மேலும் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி : இன்று மட்டும் 28 பேர்!!

3193

கொரோனா..

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை சிற்றூழியர்கள் சிற்றூழியர்கள் இருவர் உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பரிசோதனைக் கூடத்திலிருந்து இன்று (17.01.2021) இரவு 7 மணியளவில் வெளியான முடிவுகளின் அடிப்படையிலேயே இரு சிற்றூழியர்களுக்கும் வெளிநோயாளர் பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் கடந்த இரு வாரங்களில் பட்டாணிச்சூர் பகுதியில் 14 நபர்களும் நகர வர்த்தக நிலைய பரிசோதனையில் 174 நபர்களும் வவுனியா வைத்தியசாலையில் 15 நபர்களும் புளியங்குளத்தில் இருவர் என 205 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் வவுனியாவில் கடந்த இரண்டு வாரங்களில் மாத்திரம் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 205 ஆக அதிகரித்துள்ளது.