கொரோனா தொற்று..
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி புகையிரத்தில் பயணித்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதார துறையினர் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்ற புகையிரதத்தில் வருகை தந்த வவுனியாவைச் சேர்ந்தவர்களிடம் புகையிரத நிலையத்தில் வைத்து சுகாதார துறையினர் அன்டிஜன் பரிசோதனை மேற்கொண்டனர்.
இதன்போது புத்தளம் பகுதியில் இருந்து வவுனியா சூடுவெந்தபுலவு நோக்கி வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அவரிடம் பிசீஆர் பரிசோதனையும் மேற்கொள்ள சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.