வவுனியாவில் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு உழவர் சந்தை!!

391

santhai

வவுனியா விவசாய விரிவாக்கல் திணைக்களத்தினால் உள்ளூர் விவசாய உற்பத்தி பொருட்களை ஊக்குவிக்கும் பொருட்டு உழவர் சந்தை வவுனியா மாவட்ட செயலகத்தில் நேற்று (06.03) அறிமுகம் செய்துவைக்கப்பட்டது.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரினால் திறந்து வைக்கப்பட்ட இச்சந்தையில் வவுனியா மாவட்டத்தை சேர்ந்த உள்ளூர் விவசாயிகள் தமது விவசாய உற்பத்தி பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்தனர்.

வவுனியா மாவட்ட விவசாயகளுக்கு சிறந்த சந்தைப்படுத்தல் வசதியின்மையை கருத்தில் கொண்டு வவுனியா மாவட்ட விவசாய வரிவாக்கல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இவ் உழவர் சந்தையை மாதாந்தம் நடத்துவதற்கு திட்டமிடுள்ளதாக வவுனியா விவசாய விரிவாக்கல் பிரிவின் மாகாண பிரதி பணிப்பாளர் திருமதி ஏ.சகிலாபானு தெரிவித்தார்.