வவுனியா வேப்பங்குளத்தில் தீப்பற்றி எரிந்த வீடு : பல லட்சம் பெறுமதியான பொருட்கள் சேதம்!!

2331

வேப்பங்குளத்தில்..

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்று இன்று மதியம் தீப்பற்றி எரிந்ததில் பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

குறித்த வீட்டில் யாரும் அற்ற சமயத்தில் வீட்டின் சுவாமி அறையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வீடு தீப்பற்றி எரிவதினை அவதானித்த அயலவர்கள் வீட்டின் முன் கதவியினையுடைத்து தண்ணீர் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீ விபத்திற்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் வீட்டினினுள் இருந்த குளிரூட்டி, சொகுசுக் கதிரைகள், உடைகள் என பல லட்சம் பெறுமதியான பொருட்கள் தீயில எரிந்து நாசமாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த இலங்கை மின்சார சபையினர் மின்சாரத்தினை துண்டித்ததுடன் அப்பகுதி கிராம சேவையாளரும் வருகை தந்து சேதங்களை பார்வையிட்டார்.

தீ விபத்துக்கான காரணம் தொடர்பிலான விசாரணைகளை பண்டாரிக்குளம் காவலரண் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.