வவுனியாவில் இருவர் கைக்குண்டுகளுடன் கைது!!

1412

இருவர் கைது..

வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்புச் சம்பவங்களில் ஈடுபட்ட இருவரை வவுனியா குற்றத்தடுப்பு பொலிசார் கைது செய்துள்ளதாக தெரிவித்தனர்.

கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு நபர்கள் வீதியால் செல்லும் பெண்கள் அணிந்திருந்த தங்கச் சங்கிலிகளை அறுத்துச் சென்றிருந்தனர்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் வவுனியா குற்றத்தடுப்பு பொலிசாரிடம் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாடுகளிற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும்,

மதவாச்சி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை நேற்று (28.01) காலை கைது செய்திருந்ததுடன், அவர்களது உடமையில் இருந்த கைக்குண்டு, மற்றும் வாகன இலக்கத்தகடுகளையும் மீட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளில் அறுக்கப்பட்ட தங்க நகைகள் கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் அடைவு வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த உள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.