வவுனியாவில் பயங்கரவாத தடுப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

1176

கொரோனா..

வவுனியாவில் பணிபுரியும் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 17 உத்தியோகத்தர்களிற்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட பலருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த பிரிவில் பணிபுரியும் உத்தியோகத்தர்களிற்கும் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. அதன் முடிவுகள் இன்று வெளியாகியிருந்தன.

அதன் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

-தமிழ்வின்-