கொரோனா தொற்று..
வவுனியாவில் பணிபுரியும் ப.ய.ங்.க.ர.வா.த வி.சா.ர.ணை.ப் பிரிவைச் (ரி.ஐ.டி) சேர்ந்த 17 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை பிசீஆர் பரிசோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் மட்டக்களப்பு, புனானை வைத்தியசாலைக்கு இன்று (30.01) அனுப்பி வைக்கப்பட்டனர்.
வவுனியாவில் அமைந்துள்ள ப.ய.ங்.க.ர.வா.த வி.சா.ர.ணை.ப் பிரிவினரால் த.டு.த்.து வை.க்கப்பட்டு வி.சா.ர.ணை செ.ய்யப்பட்ட 16 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது அண்மையில் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து குறித்த பிரிவில் பணிபுரியும் உத்தியோகத்தர்களுக்கும் பி.சீ.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது. அதன் முடிவுகள் நேற்று (29.01) வெளியாகியிருந்தன.
அதன் அடிப்படையில் ப.ய.ங்.க.ர.வா.த வி.சா.ர.ணை.ப் பிரிவு மற்றும் அதனுடன் இணைந்தவர்கள் என 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ப.ய.ங்.க.ர.வா.த வி.சா.ர.ணை.ப் பி.ரிவினரில் 10 பேர் மட்டக்களப்பு, புனானை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.