வவுனியாவில் மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று!

1430

கொரோனா..

யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் வவுனியாவில் பொலிஸார் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக வட மாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். போதனா வைத்திய சாலை ஆய்வுகூடத்தில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளிலேயே குறித்த தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் குறித்த நபர் பொலிஸார் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.