வவுனியாவில் தொடர் சங்கிலி அறுப்பு தொடர்பில் கை.க்.கு.ண்.டு.ட.ன் மூவர் கைது!!

1587

மூவர் கைது..

வவுனியாவில் தொடர் சங்கிலி அ.றுப்புச் சம்பவங்கள் தொடர்பில் கை.க்.கு.ண்.டு.ட.ன் மூவர் கை.து செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒருவார காலப்பகுதியில் வவுனியா வேப்பங்குளம், சாந்தசோலை, இறம்பைக்குளம் பகுதிகளில் வீதியால் செல்லும் பெண்களை பின் தொடர்ந்து மோட்டர் சைக்கிளில் சென்ற நபர்கள் அவர்கள் அணிந்திருந்த சங்கிலிகளை அ.றுத்துச் சென்றிருந்தனர்.

இது தொடர்பாக பா.திக்கப்பட்டவர்கள் வவுனியா கு.ற்றத்தடுப்பு பொலிசாரிடம் மு.றைப்பாடு செய்திருந்தனர். குறித்த மு.றைப்பாடுகளிற்கமைய வி.சாரணைகளை மேற்கொண்ட பொலிசார் குறித்த சம்பவத்துடன்,

தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மதவாச்சி பகுதியை சேர்ந்த இரண்டு நபர்களை கைது செய்திருந்ததுடன், அவர்களது உடமையில் இருந்து கை.க்.கு.ண்.டு, மோட்டார் சைக்கிள் மற்றும் வாகன இலக்கத் தகடுகளையும் மீ.ட்டுள்ளனர்.

அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட வி.சாரணைகளின் அடிப்படையில் கொழும்பு வெள்ளவத்தைப் பகுதியில் அடைவு வைக்கப்பட்ட நிலையில் 9 பவுண் நகைகள் மீ.ட்கப்பட்டதுடன், கொழும்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும் கை.து செ.ய்யப்பட்டுள்ளார்.

கை.து செய்யப்பட்டவர்களை மேலதிக வி.சாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.