இறப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன் குறுஞ் செய்தி : மகிழ்ச்சியாக சென்ற இளம் தந்தைக்கு நேர்ந்த துயரம்!!

622

பிரித்தானியாவில்..

பிரித்தானியாவில் காரில் சென்ற இளம் தந்தை பாலத்தில் இருந்து கீழே விழுந்து நதியில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவரின் புகைப்படம் முதல் முறையாக வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை இரவு உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் Sheffield-ல் இருக்கும் பாலத்தில் சென்ற போது, எதிர்பார்தவிதமாக அந்த பாலத்தின் இரும்பு பேரியர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், காரானாது, கீழே நதியில் மூழ்கியதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தால், இளம் தந்தையான Tommy Hydes(24) மற்றும் அவருடைய உறவினர் மற்றும் மருமகன் என்றழைக்கப்படும் Josh Hydes(20) பரிதாபமாக நதியில் மூழ்கினர்.

இவர்கள் சென்ற கார் மெர்சிடிஸ் கார், இது குறித்து உடனடியாக ஆம்புலன்சிற்கு தெரிவிக்கப்பட்டு, இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இருப்பினும், அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட சிறிது நேரத்தில் உயிரிழந்தனர். இவர்களின் இறுதிச்சடங்கிற்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு அக்டோபரில் தான் Tommy Hydes-க்கு குழந்தை பிறந்துள்ளது. இவருக்கு April Rose என்ற காதலி உள்ளார். இவர் அயர்லாந்தை சேர்ந்தவர். தனது கணவர் மரணம் குறித்து அவர் கூறுகையில், அவர் இறப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார்.

அப்போது Josh Hydes வாகனம் ஓட்டிக் கொண்டிருந்தார். அவர் என் காதலன் மட்டுமல்ல, எனக்கு எப்போதும் சிறந்த நண்பராக இருந்தார். நான் உன்னை அவரை மிகவும் நேசிக்கிறேன்.

அவரின் மரணம் என்னைக் கொல்கிறது, நீங்கள் திரும்பி வர முடியாது என்பது எனக்கு தெரியும், அது எனக்கு மிகவும் வலிக்கிறது என்று வேதனையுடன் கூறியுள்ளார். உயிரிழந்த Tommy Hydes-ன் புகைப்படம் முதல் முறையாக பிரபல ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் வெளியிட்டுள்ளது.